
செய்திகள் தொழில்நுட்பம்
2025 ஆண்டு முதல் சவுதியில் USB Type-C மட்டுமே பயன்படுத்த முடியும்
ஜித்தா:
சவூதி அரேபியாவில் வரும் ஜனவரி 1, 2025 முதல் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜிங் போர்ட்களை தரநிலையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2025 முதல் USB Type-C மட்டுமே தரப்படுத்தப்பட்ட இணைப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தரநிலைகள், அளவியல், தர அமைப்பு, தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் இதனை அறிவித்துள்ளது.
மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தினை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளன.
அதில் நாட்டில் உள்ள இணைப்பிகளைப் பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்றும் கூடுதல் செலவுகளைச் செய்யக்கூடாது என்ற நோக்கில் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தரநிலைகள், அளவியல், தர அமைப்பு மற்றும் தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையமானது, மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தினை சமர்ப்பித்தது.
அதில் நாட்டில் உள்ள இணைப்பிகளைப் பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்றும் கூடுதல் செலவுகளைச் செய்யக்கூடாது என்ற நோக்கில் இந்த திட்டத்தினை செயல்படுத்த உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் கழிவுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் கொள்கைகளை ஆதரிப்பதோடு, உயர்தர தரவு பரிமாற்ற தொழில்நுட்பத்தை வழங்கவும் இது உதவியாக இருக்கும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவானது, ஆண்டுக்கு 2.2 மில்லியன் யூனிட்களுக்கு மேல் மொபைல் ஃபோன்கள், எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான சார்ஜர்கள், கேபிள்களை சார்ஜ் செய்யும் உள்நாட்டு நுகர்வு அளவைக் குறைப்பதற்கும், நாட்டில் உள்ள நுகர்வோரின் செலவினத்தை 170 மில்லியன் ரியாலுக்கும் அதிகமாக சேமிப்பதற்கும் பங்களிக்கும் என கூறப்படுகின்றது.
ஆண்டுதோறும் மின்னணு கழிவுகளை சுமார் 15 டன்கள் குறைப்பதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் நிலைத்தன்மைக்கான நாட்டின் இலக்குகளை அடையவும் இது உதவுகிறது.
ஆதாரம்: Khaleej Times
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
June 8, 2025, 5:12 pm