செய்திகள் இந்தியா
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: 3 பேர் பலி
இம்பால்:
மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தந்தை,மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது.
அங்கு தொடர்ந்து கலவரங்கள் வெடிப்பதால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மைதேயி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் விஷ்ணுபூர் மாவட்டத்தின் குவாக்டா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
மலைப் பகுதி மாவட்டமான சுராசந்த்பூரில் இருந்து வந்த தீவிரவாதிகள், குவாக்டா பகுதியில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தந்தைமகன் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
முகாம்களில் தங்கியிருந்த இவர்கள், வெள்ளிக்கிழமைதான் தங்களின் வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். இந்தக் கொலைகளுக்கு பதிலடியாக, விஷ்ணுபூரின் உகா தம்பக் பகுதியில் பல வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am