நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூருக்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி

புது டெல்லி:

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ஜூன் 29 தேதி செல்கிறார்.

பாஜக ஆட்சி நடத்தி வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே மே மாதம் 3ஆம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது.

100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டும் அமைதி நிலைநாட்ட முடியவில்லை. நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், ஜூன் 29-30 தேதிகளில் மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ளோரை சந்திக்கும் ராகுல், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

2 மாதங்களாக பற்றி எரிந்து வரும் மணிப்பூர், அமைதியை நோக்கி நகர்வதற்கான ஆற்றுப்படுத்துதல் அவசியம். அன்பை பரப்ப வேண்டியது நமது பொறுப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset