நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆணாக மாறும் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மகள்

கொல்கத்தா:

பாலின மாற்றம் செய்து ஆணாக மாறப் போவதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மகள் சுசேத்னா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

41 வயதாகும் சுசேத்னா பட்டாச்சார்யா இது தொடர்பாக கூறுகையில், என்னை ஒரு பெண்ணாகக் கருதாமல் ஆணாகக் கருதியதால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தேன்.

நான் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. போராட்டத்துக்கு நான் தயார். ஆணாகப் போகும் என்னை சுசேதன் என்ற பெயரில் மற்றவர்கள் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மூன்றாம் பாலினத்தவர் உள்பட ஒடுக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

எனது முடிவுக்கு தந்தை புத்ததேவ் பட்டாச்சார்யா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளார். தாய்க்கு சில ஆட்சேபங்கள் இருந்தபோதிலும் அவர் எனது முடிவை எதிர்க்கவில்லை.

நான் ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை விரைவில் நடைபெறும். எனது முடிவை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset