செய்திகள் உலகம்
ரஷ்யா மேலும் ஓர் அணையை குண்டு வீசி தகர்த்துள்ளது - உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
கீவ் :
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.
ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி தங்களது படையினா் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷ்யா ஈடுபட்டதாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறியதாவது:
மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷிய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகா்த்துள்ளனா். இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா். அவா்களது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷ்யா தகா்த்துள்ளது.
தங்களது படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்யா குண்டுவீசி தகா்த்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 10:25 pm
சீனாவுடனான ராணுவ உறவு வலுப்படுத்தப்படும்: புதின்
May 16, 2024, 10:23 pm
நைஜீரியாவில் பள்ளிவாசலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் பலி
May 16, 2024, 11:50 am
துப்பாக்கி சூட்டிற்கு ஆளான சுலோவேக்கியா பிரதமர் நலமாக இருக்கின்றார்: அமைச்சர் தகவல்
May 16, 2024, 12:13 am
சிங்கப்பூரின் 4ஆவது பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்
May 15, 2024, 11:32 pm
ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: 4 குண்டுகள் பாய்ந்தன
May 14, 2024, 6:44 pm