செய்திகள் உலகம்
காங்கோவில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 46 பேர் பலி
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான டிஆர் காங்கோவில் அகதிகள் மையத்தின் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
சிஓடிஇசிஓ என்ற ஆயுதக் குழு இடுரி மாகாணம், லாலா என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெண்டு என்ற இனத்தைச் சேர்ந்தவர்களை ஹெமா என்ற மற்றொரு இன ஆயுதக் குழுவிடமிருந்தும், டிஆர் காங்கோ ராணுவத்திடமிருந்தும் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிஓடிஇசிஓ, எதிர்த் தரப்பினர் மீது இதுபோன்ற தாக்குதல்களைஅடிக்கடி நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 46 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 10:25 pm
சீனாவுடனான ராணுவ உறவு வலுப்படுத்தப்படும்: புதின்
May 16, 2024, 10:23 pm
நைஜீரியாவில் பள்ளிவாசலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பேர் பலி
May 16, 2024, 11:50 am
துப்பாக்கி சூட்டிற்கு ஆளான சுலோவேக்கியா பிரதமர் நலமாக இருக்கின்றார்: அமைச்சர் தகவல்
May 16, 2024, 12:13 am
சிங்கப்பூரின் 4ஆவது பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்
May 15, 2024, 11:32 pm
ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: 4 குண்டுகள் பாய்ந்தன
May 14, 2024, 6:44 pm