
செய்திகள் இந்தியா
நியாயமான பயணக்கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
புது டெல்லி:
நியாயமான பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒடிஸா ரயில் விபத்து ஏற்பட்ட பிறகு அங்கு செல்வதற்கான விமான கட்டணங்கள் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டன.
மேலும், கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கோஃபர்ஸ்ட் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியதாலும் விமான பயணக் கட்டணம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் விமான நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆலோசனை மேற்கொண்டார்.
பயணக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ள வழித்தடங்களில் கட்டணத்தை சுயமாக ஒழுங்குப்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியாயமான பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழிமுறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிக்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm