
செய்திகள் இந்தியா
நியாயமான பயணக்கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்
புது டெல்லி:
நியாயமான பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒடிஸா ரயில் விபத்து ஏற்பட்ட பிறகு அங்கு செல்வதற்கான விமான கட்டணங்கள் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டன.
மேலும், கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள கோஃபர்ஸ்ட் நிறுவனம் விமான சேவையை நிறுத்தியதாலும் விமான பயணக் கட்டணம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் விமான நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆலோசனை மேற்கொண்டார்.
பயணக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ள வழித்தடங்களில் கட்டணத்தை சுயமாக ஒழுங்குப்படுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியாயமான பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழிமுறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிக்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
October 22, 2025, 10:04 pm
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
October 21, 2025, 10:18 pm
இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm