
செய்திகள் இந்தியா
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினசரி வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்த்து மசூதி நிர்வாகக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி 5 ஹிந்து பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி நிர்வாகக் குழு சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிபதி கடந்த ஆண்டு செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாக குழு சார்பில் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முனீர், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த மசூதியில் உள்ள தொழுகைக்கு கை, கால் சுத்தம் செய்யப்பட்ட நீர் ஊற்றை சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதித்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி நிறுத்திவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm