செய்திகள் இந்தியா
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினசரி வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்த்து மசூதி நிர்வாகக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி 5 ஹிந்து பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி நிர்வாகக் குழு சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிபதி கடந்த ஆண்டு செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாக குழு சார்பில் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முனீர், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த மசூதியில் உள்ள தொழுகைக்கு கை, கால் சுத்தம் செய்யப்பட்ட நீர் ஊற்றை சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதித்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி நிறுத்திவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
