
செய்திகள் இந்தியா
ஞானவாபி மசூதி குழுவின் மனு தள்ளுபடி
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினசரி வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்த்து மசூதி நிர்வாகக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மசூதியில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி 5 ஹிந்து பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி நிர்வாகக் குழு சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மாவட்ட நீதிபதி கடந்த ஆண்டு செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாக குழு சார்பில் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முனீர், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த மசூதியில் உள்ள தொழுகைக்கு கை, கால் சுத்தம் செய்யப்பட்ட நீர் ஊற்றை சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த அனுமதித்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி நிறுத்திவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm