நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மொக்கா புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே நாளை கரையைக் கடக்கும்

சென்னை: 

வங்கக்கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மொக்கா’ நாளை வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையை கரையை கடக்கும்.

இதன் காரணமாக வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘மொக்கா’ புயல் மே 11-ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது 12-ஆம் தேதி (நேற்று) மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி, அதே பகுதியில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு, வடகிழக்காக நகர்ந்து, மேலும் வலுப்பெற்று 14-ஆம் தேதி (நாளை) நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது, 150-175 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset