
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மொக்கா புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே நாளை கரையைக் கடக்கும்
சென்னை:
வங்கக்கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ‘மொக்கா’ நாளை வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையை கரையை கடக்கும்.
இதன் காரணமாக வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘மொக்கா’ புயல் மே 11-ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது 12-ஆம் தேதி (நேற்று) மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி, அதே பகுதியில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு, வடகிழக்காக நகர்ந்து, மேலும் வலுப்பெற்று 14-ஆம் தேதி (நாளை) நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் - வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது, 150-175 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 12:19 pm
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது
June 13, 2025, 9:31 pm
மதுரையில் இருந்து இன்று முதல் அபுதாபிக்கு நேரடி விமானசேவை
June 12, 2025, 4:28 pm
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்; நான் விமானத்தில் கண்...
June 11, 2025, 10:08 pm
கீழடி அகழ்வாராய்ச்சியை அங்கீகரிக்க அறிவியல் தரவுகள் தேவை: ஒன்றிய அமைச்சரின் பேச்சு...
June 11, 2025, 9:25 am
மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை: கமல்ஹாசன் உள்ளிட்ட 6 பேர் போட்டியின்ற...
June 10, 2025, 11:33 am
'தூர கிழக்கில் தமிழ் ஆய்வுகள்: கொரியா' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
June 9, 2025, 4:19 pm
தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி
June 9, 2025, 8:43 am
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
June 8, 2025, 9:17 pm
அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது; மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் ஓர் உதார...
June 8, 2025, 1:16 pm