
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியா சுற்றுலாப் பயணி கன்னத்தில் அறைந்த வனத்துறை அதிகாரி: கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல்:
கொடைக்கானல் குணா குகைக்கு சென்ற மலேசியா சுற்றுலா பயணியை நுழைவு கட்டணமாக 100 ரூபாய் செலுத்தக் கூறி பெண் வன அதிகாரி கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும்.
தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் இங்கு நிலவும் கால நிலையை அனுபவிக்க வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் மலேசியா நாட்டை சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிந்து குணா குகை சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கும் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 10 ரூபாய் கட்டணத்தை மட்டும் செலுத்தி, குணா குகை உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது நுழைவு கட்டணத்தை ஆய்வு செய்த வேட்டை தடுப்பு தற்காலிக அதிகாரி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செல்ல நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் எனவும், நீங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மலேசியா சுற்றுலாப் பயணிகள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எந்த அறிவிப்பு பதாகைகள் இல்லை.
மேலும் நாங்கள் தமிழ் மொழி பேசுகிறோம் எதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைதொடர்ந்து வனத்துறையினறுக்கும், மலேசியா சுற்றுலாப் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானது.
இந்நிலையில் அப்பகுதியில் பணியாற்றுபவர்கள் மீது, மலேசியா சுற்றுலாப் பயணிகளில் வயதான பெண் ஒருவர் பிளாஸ்டிக் போன்ற பொருளை எறிந்துள்ளார்.
இதனைதொடர்ந்து பெண் அதிகாரி அந்த வயதான பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையினறும், மலேசியா சுற்றுலாப் பயணிகளும் தனித் தனியாக கொடைக்கானல் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm