
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது
சென்னை:
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அந்த வகையில் மேற்கு கடற்கரையில், அரபிக் கடல் பகுதியில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால், விசைப்படகு மீனவர்கள் ஏப்.15-ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm