நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்கதேசத்தின் அதிபரானார் முஹம்மது சஹாபுதீன்

டாக்கா: 

வங்கதேசத்தின் 22ஆவது அதிபராக முஹம்மது சஹாபுதீன்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

வங்கதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீதின் பதவிக்காலம் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது.

புதிய அதிபராகக் கடந்த பிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முஹம்மது சஹாபுதீன், அப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.

நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset