செய்திகள் இந்தியா
10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை
புது டெல்லி:
2023-இல் இதுவரை 10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதிலில், விமானப் பயணத்தின்போது சக பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் பயணிகளுக்கு விமானப் பொது போக்குவரத்து நடத்தை விதிகளின் படி பறக்க தடை விதிக்கப்படும்.
விமான நிறுவனங்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2021ஆம் ஆண்டில் 66 பேரும், 2022ஆம் ஆண்டில் 63 பேரும் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
நிகழாண்டில், தற்போது வரை 10 பேர் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோருக்கு, முகக்கவசம் அணியாதது, விமானப் பணியாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
