நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?

புது டெல்லி:

ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காதது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஏடிஎம்களில் அத்தகைய நோட்டுகள்  வைப்பது தொடர்பாக வங்கிகளுக்கு ஒன்றிய அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பான கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், ஆர்பிஐ தகவல்படி 2017 இறுதியில் ரூ.9.512 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2022 மார்ச் மாத இறுதியில் ரூ.27.057 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் இருந்தன.

ரூ.2000 நோட்டுகளை ஏடிஎம்களில் வைப்பது தொடர்பாக வங்கிகளுக்கு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வங்கிகள் தங்க சுயவிருப்பப்படி முடிவெடுக்கின்றன.

ஒரு பகுதியில் வாடிக்கையாளர்களின் தேவை, குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏடிஎம்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது வங்கிகள் ஏடிஎம்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புகின்றன என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset