செய்திகள் இந்தியா
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
புது டெல்லி:
ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காதது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஏடிஎம்களில் அத்தகைய நோட்டுகள் வைப்பது தொடர்பாக வங்கிகளுக்கு ஒன்றிய அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பான கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், ஆர்பிஐ தகவல்படி 2017 இறுதியில் ரூ.9.512 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2022 மார்ச் மாத இறுதியில் ரூ.27.057 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் இருந்தன.
ரூ.2000 நோட்டுகளை ஏடிஎம்களில் வைப்பது தொடர்பாக வங்கிகளுக்கு அரசு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வங்கிகள் தங்க சுயவிருப்பப்படி முடிவெடுக்கின்றன.
ஒரு பகுதியில் வாடிக்கையாளர்களின் தேவை, குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏடிஎம்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது வங்கிகள் ஏடிஎம்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புகின்றன என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
