செய்திகள் மலேசியா
ஆசியாவில் தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா உருவாகும்: மாட்ஃபா
ஷாஆலம்:
ஆசியாவில் தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா உருவாகும் என்று மாட்ஃபாவின் தலைவர் டான்ஸ்ரீ ரிச்சர்ட் சிகே கோ கூறினார்.
ஃபன்பேர் தொடங்கி இன்று பல பில்லியன் வெள்ளி முதலீடு செய்யும் துறையாக இந்த தீம் பார்க் விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் இத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.
மிகவும் தரமாகவும் நியாயமான கட்டணங்களுடன் இந்த தீம் பார்க்குகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலை நீடிக்கும் வகையில் ஆசியாவிலேயே தீம் பார்க்கின் தலைமையகமாக மலேசியா விளங்கும்.
இந்நிலையில் நாட்டில் உள்ள டீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தான் மாட்ஃபா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் முயற்சியாக மாட்ஃபா கோல்டன் ஹோர்ஸ் விருது விழா நடைபெறவுள்ளது.
இவ்விழா வரும் ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கெந்திங்மலை ஃபேர்ஸ்வேல்டு தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.
நாட்டில் உள்ள தீம் பார்க், குடும்பங்களுக்கான உல்லாச மையங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 35 விருதுகளை இவ்விழா கொண்டு உள்ளது.
இந்த விருதுகளுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். நடுவர் குழுவின் முடிவுக்கு பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் என்று டான்ஸ்ரீ ரிச்சர்ட் சிகே கோ கூறினார்.
இவ்விருது விழா அறிமுக நிகழ்வில் மாட்ஃபாவின் ஆலோசகர் டத்தோ டாக்டர் குமரராஜா கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
