
செய்திகள் இந்தியா
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
புது டெல்லி:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் குடும்பப் பெயர் குறித்து சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது.
இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் தெரிவித்த கருத்துகளுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் இந்த உரிமை மீறல் நோட்டீûஸத் தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நேருவின் குடும்பப் பெயரை அவரின் குடும்பத்தினர் பயன்படுத்தாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், பிரதமர் மோடிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை வழங்கியுள்ளார்.
அதில்,நாடாளுமன்ற உறுப்பினரின் ஜாதி குறித்து தவறான கண்ணோட்டத்தைப் பதிவு செய்ததற்காக, மாநிலங்களவை அலுவல் விதி 188இன் கீழ் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படுகிறது.
நேருவின் குடும்பத்தினரைக் கேலி செய்யும் தொனியில் பிரதமர் பேசியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:43 pm
ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் கருத்து: கன்னட நடிகர் கைது
March 22, 2023, 12:03 am
10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை
March 21, 2023, 10:01 pm
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
March 21, 2023, 9:24 pm
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
March 19, 2023, 6:40 pm
பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி இஸட் பிளஸ் பாதுகாப்புடன் வலம்வந்த குஜராத் நபர் பலே மோசடி
March 19, 2023, 5:47 pm
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
March 17, 2023, 4:10 pm
அதானி விவகாரத்தில் தப்பிக்கவே பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது: காங்கிரஸ் தலைவர்
March 17, 2023, 3:49 pm
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
March 16, 2023, 2:01 pm