செய்திகள் இந்தியா
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானைப் போல இந்தியாவிலும் ஆளும் ஒன்றிய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி கூறினார்.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கானை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஜம்முவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மெஹபூபா முஃப்தி தொண்டர்களிடம் பேசுகையில்,
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்கள் வேதனையளிக்கின்றன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இப்போது ஒரே நிலைதான் உள்ளது. பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது.
ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், சிவசேனைத் தலைவர்கள் என பலரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
மெஹபூபா அண்மையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அபிஷேகம் செய்தது சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக அவர் பேசுகையில், மதசார்பற்ற நாட்டில் வசித்து வருகிறோம். அந்த சிவன் கோயில் பிடிபி கட்சியின் மூத்த தலைவர் மறைந்த யஷ்பால் சர்மாவால் கட்டப்பட்டது. அவரது மகன் அழைப்பின் பேரில் அந்தக் கோயிலுக்குச் சென்றேன். அங்கு ஒருவர் மிகுந்த நம்பிக்கை, பக்தியுடன் அபிஷேகம் செய்ய பாத்திரத்தில் தண்ணீர் தந்தார். அவரை புண்படுத்தக் கூடாது என்று சிவலிங்கத்துக்கு நீரால் அபிஷேகம் செய்தேன் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am