நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி

டர்பன்:

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 2-வது ஒருநாள் ஆட்டமும் புளூம்ஃபாண்டேனில் நடைபெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80, மொயீன் அலி 51, பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்கள். 

இலக்கை விரட்டியபோது தென்னாப்பிரிக்காவின் முதல் நான்கு பேட்டர்கள் அபாரமாக விளையாடினார்கள். 

கேப்டன் பவுமா 102 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் 49 ரன்கள் எடுத்தார். 

கடைசிக்கட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியைக் கரை சேர்த்தார். 

தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

- செய்திப்பிரிவு 

தொடர்புடைய செய்திகள்

+ - reset