
செய்திகள் தொழில்நுட்பம்
விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைக்கக்கூடாது: இந்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு
புதுடெல்லி:
இந்தியாவில் 5ஜி சேவையை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பெரும்பாலான இடங்களில் அந்த சேவை சரிவர இயங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் அதிவேகமான ஆற்றல் வீச்சினால் விமானக் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுரங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும், ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
September 15, 2023, 5:22 pm
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
September 8, 2023, 8:54 pm
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
September 7, 2023, 10:42 am
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
September 1, 2023, 3:55 pm
தொலைப்பேசி எண் இல்லாமல் வீடியோ & ஆடியோ அழைப்புகள் செய்யலாம் - எலான் மஸ்க் அறிவிப்பு
August 30, 2023, 11:43 pm
நிலவின் மேற்பரப்பில் SULPHUR சந்திரயான் 3 மூலம் கண்டுபிடிப்பு
August 26, 2023, 3:54 pm
நிலவில் 8 மீட்டர் நடைபோட்ட ரோவர்
August 25, 2023, 3:31 pm
சந்திரயான் டூடுல்: கூகுள் கொண்டாட்டம்
August 23, 2023, 7:22 pm
சந்திரயான்-3 இன்னும் சிறிது நேரத்தில் தரை இறங்கும்: இஸ்ரோ
August 23, 2023, 11:10 am
X பயன்பாடு தோல்வியடையக்கூடும்: எலான் மாஸ்க்
August 19, 2023, 1:20 pm