செய்திகள் இந்தியா
குஜராத் வன்முறையாளர்களுக்கு உரிய பாடம் கற்பித்தோம்: அமித் ஷா
ஜலோட்:
குஜராத்தில் 1000 பேரை பலி கொண்ட 2002 கோத்ரா வகுப்புவாத வன்முறையாளர்களுக்கு சரியான பாடம் கற்பித்ததாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் அவர் கூறினார். குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத வன்முறை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இரு மதங்களுக்கு இடையே மட்டுமல்லாது, பல்வேறு சமூகத்தினர் இடையேயும் பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் துண்டிவிட்டது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியை அவர்கள் அதிகரித்துக் கொண்டனர்.
சமுகத்தின் ஒரு பிரிவினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் அநீதியை மட்டுமே இழைத்து வந்தது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையைத் தொடங்கியவர்கள் கூட காலம்காலமாக காங்கிரஸால் ஆதரிக்கப்பட்டு வந்தவர்கள்தான். காங்கிரஸ் கட்சி ஆதரவு இருக்கும் தைரியத்தில் அவர்கள் வன்முறையில் இறங்க தயங்குவதே இல்லை.
ஆனால், 2002ஆம் ஆண்டு வன்முறைக்குப் பிறகு, அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டது.
இதன் மூலம் அவர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டனர். அதன் பிறகு இப்போது வரை குஜராத்தில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை.
மத வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது பாஜக அரசு எடுத்த கடும் நடவடிக்கைகள் மூலம் இங்கு நிரந்தர அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார் அமித் ஷா.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 10:22 pm
ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
April 18, 2024, 9:48 pm
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
April 18, 2024, 8:36 am
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
April 16, 2024, 10:54 pm
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது
April 16, 2024, 10:49 pm
அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்
April 15, 2024, 5:16 pm
4,650 ரூபாய் கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் பறிமுதல்
April 14, 2024, 8:53 pm
சாலையில் ரமலான் தொழுகை: 200 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்கு
April 14, 2024, 7:47 pm
பிரசாரத்தில் கல்வீச்சு: ஜெகன்மோகன் ரெட்டி காயம்
April 14, 2024, 2:30 pm