செய்திகள் இந்தியா
குஜராத் வன்முறையாளர்களுக்கு உரிய பாடம் கற்பித்தோம்: அமித் ஷா
ஜலோட்:
குஜராத்தில் 1000 பேரை பலி கொண்ட 2002 கோத்ரா வகுப்புவாத வன்முறையாளர்களுக்கு சரியான பாடம் கற்பித்ததாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அங்கு முழுமையான அமைதி நிலவுவதாகவும் அவர் கூறினார். குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர்,
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத வன்முறை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இரு மதங்களுக்கு இடையே மட்டுமல்லாது, பல்வேறு சமூகத்தினர் இடையேயும் பிளவை ஏற்படுத்தி வன்முறையைத் துண்டிவிட்டது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியை அவர்கள் அதிகரித்துக் கொண்டனர்.
சமுகத்தின் ஒரு பிரிவினருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் அநீதியை மட்டுமே இழைத்து வந்தது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையைத் தொடங்கியவர்கள் கூட காலம்காலமாக காங்கிரஸால் ஆதரிக்கப்பட்டு வந்தவர்கள்தான். காங்கிரஸ் கட்சி ஆதரவு இருக்கும் தைரியத்தில் அவர்கள் வன்முறையில் இறங்க தயங்குவதே இல்லை.
ஆனால், 2002ஆம் ஆண்டு வன்முறைக்குப் பிறகு, அவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட்டது.
இதன் மூலம் அவர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டனர். அதன் பிறகு இப்போது வரை குஜராத்தில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை.
மத வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது பாஜக அரசு எடுத்த கடும் நடவடிக்கைகள் மூலம் இங்கு நிரந்தர அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார் அமித் ஷா.
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
சமையல் தகராறில் நேர்ந்த விபரீதம்: மனைவியின் அரிவாள் வீச்சில் கணவன் பலி
April 28, 2026, 2:45 pm
வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த அவல நிலை: பயணிகளுக்கு இந்தியா பாதுகாப்பானதா?
April 27, 2026, 6:32 pm
25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; ரூ.289 கோடி விழலுக்கு இறைத்த நீர்: PDUIA-ன் அவல நிலை
April 27, 2026, 5:20 pm
புதுடில்லியிலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு: ஐவர் காயம்
April 27, 2026, 3:17 pm
மகாராஷ்டிராவை உலுக்கும் வன்கொடுமை வழக்கு: அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்
April 26, 2026, 10:20 pm
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
April 25, 2026, 9:28 pm
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
April 25, 2026, 4:21 pm
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
April 24, 2026, 11:34 am
