செய்திகள் வணிகம்
வாட்ஸ்ஆப் இந்திய பிரிவுத் தலைவர் ராஜிநாமா
புது டெல்லி:
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ், மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.
வருவாய் இழப்பு காரணமாக சர்வதேச அளவில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் அறிவித்த நிலையில், இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைவர் வில் கேட்ச்சார்ட் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.
வாட்ஸ்ஆப் இந்தியாவின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குநராக உள்ள சிவானந்த் துக்ரால் இனி மெட்டாவின் அனைத்து துணை நிறுவனங்களின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2019 பிப்ரவரியில்தான் அபிஜித் போஸ் "வாட்ஸ்ஆப் இந்தியா' தலைவராக பொறுப்பேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
