
செய்திகள் வணிகம்
வாட்ஸ்ஆப் இந்திய பிரிவுத் தலைவர் ராஜிநாமா
புது டெல்லி:
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ், மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.
வருவாய் இழப்பு காரணமாக சர்வதேச அளவில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் அறிவித்த நிலையில், இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைவர் வில் கேட்ச்சார்ட் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.
வாட்ஸ்ஆப் இந்தியாவின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குநராக உள்ள சிவானந்த் துக்ரால் இனி மெட்டாவின் அனைத்து துணை நிறுவனங்களின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2019 பிப்ரவரியில்தான் அபிஜித் போஸ் "வாட்ஸ்ஆப் இந்தியா' தலைவராக பொறுப்பேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm