செய்திகள் இந்தியா
பிகாரில் 100 ஆண்டுகள் பழமையான சுல்தான் மாளிகை இடிக்க உயர்நீதிமன்றம் தடை
பாட்னா:
பிகார் தலைநகர் பாட்னாவில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டும் மாநில அரசின் திட்டத்துக்காக 100 ஆண்டுகள் பழமையும் வரலாற்றுசிறப்பும் வாய்ந்த சுல்தான் மாளிகையை இடிப்பதற்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்டக் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்குரைஞர் சர் சுல்தான் அகமதுவால் 1922இல் கட்டப்பட்ட இம்மாளிகை அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் 5 நட்சத்திர விடுதி கட்டப்படும் என்று மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
நட்சத்திர விடுதி கட்டுவதற்காக, சுல்தான் மாளிகையை இடிக்கும் முடிவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்பரியச் சின்னங்களின் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பு கருத்துகள் வேகமாக பரவின.
இதையடுத்து, சுல்தான் மாளிகையை இடிக்க தடை விதித்த நீதிபதிகள், 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மாளிகையை இடிக்க முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து 8 வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
