செய்திகள் இந்தியா
பிகாரில் 100 ஆண்டுகள் பழமையான சுல்தான் மாளிகை இடிக்க உயர்நீதிமன்றம் தடை
பாட்னா:
பிகார் தலைநகர் பாட்னாவில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டும் மாநில அரசின் திட்டத்துக்காக 100 ஆண்டுகள் பழமையும் வரலாற்றுசிறப்பும் வாய்ந்த சுல்தான் மாளிகையை இடிப்பதற்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்டக் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்குரைஞர் சர் சுல்தான் அகமதுவால் 1922இல் கட்டப்பட்ட இம்மாளிகை அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் 5 நட்சத்திர விடுதி கட்டப்படும் என்று மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
நட்சத்திர விடுதி கட்டுவதற்காக, சுல்தான் மாளிகையை இடிக்கும் முடிவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்பரியச் சின்னங்களின் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பு கருத்துகள் வேகமாக பரவின.
இதையடுத்து, சுல்தான் மாளிகையை இடிக்க தடை விதித்த நீதிபதிகள், 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மாளிகையை இடிக்க முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து 8 வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm