
செய்திகள் இந்தியா
பிகாரில் 100 ஆண்டுகள் பழமையான சுல்தான் மாளிகை இடிக்க உயர்நீதிமன்றம் தடை
பாட்னா:
பிகார் தலைநகர் பாட்னாவில் ஐந்து நட்சத்திர விடுதி கட்டும் மாநில அரசின் திட்டத்துக்காக 100 ஆண்டுகள் பழமையும் வரலாற்றுசிறப்பும் வாய்ந்த சுல்தான் மாளிகையை இடிப்பதற்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்டக் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்குரைஞர் சர் சுல்தான் அகமதுவால் 1922இல் கட்டப்பட்ட இம்மாளிகை அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் 5 நட்சத்திர விடுதி கட்டப்படும் என்று மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
நட்சத்திர விடுதி கட்டுவதற்காக, சுல்தான் மாளிகையை இடிக்கும் முடிவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள், பாரம்பரியச் சின்னங்களின் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பு கருத்துகள் வேகமாக பரவின.
இதையடுத்து, சுல்தான் மாளிகையை இடிக்க தடை விதித்த நீதிபதிகள், 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மாளிகையை இடிக்க முடிவு செய்தது ஏன்? என்பது குறித்து 8 வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm