செய்திகள் மலேசியா
ரோஹின்யா அகதிகள் குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள ரோஹின்யா அகதிகள் இங்கு வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து உள்துறை அமைச்சு முடிவு செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சின் அறிக்கைக்காக தமது அமைச்சு காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்றார்.
"நாட்டில் தற்போது பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். நிலைமையின் தீவிரத்தை நானும் உணர்ந்துள்ளேன்.
"எனினும் தேசத்தின் பாதுகாப்பு என்று வரும்போது அதில் சமரசத்துக்கு இடமில்லை. எனவே இதுகுறித்து ஆராயும் பொறுப்பை உள்துறை அமைச்சிடமே விட்டுவிடுகிறேன்.
"ரோஹின்யா அகதிகளை வேலை பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் மேலும் பல அகதிகள் இங்கு வர விரும்புவார்கள்.
"அனைத்துலக கடற்பகுதிகளில் ஏராளமான ரோஹின்யா அகதிகளுடன் சில பறவைகள் மாதக்கணக்கில் காத்திருப்பதாக அறிகிறேன்.
"அவையெல்லாம் கண்சிமிட்டும் நேரத்துக்குள் மலேசிய கடல் எல்லைக்குள் நுழைந்துவிடும்.
"மலேசியாவுக்குள் நுழையும் இந்த அகதிகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு மூன்றாம் நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை," என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 103,090 ரோஹின்யா அகதிகள் இருப்பதாக அகதிகளுக்கான ஐநா ஆணையர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முஹம்மத் சுக்ரி ராஜினாமா செய்தார்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
