நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 10-இல் தேர்தல்

புது டெல்லி: 

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஜூன் 10ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.

உத்தர பிரதேசத்தில் 11 உறுப்பினர்கள், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 6 உறுப்பினர்கள், பிகாரில் 5 உறுப்பினர்கள், ஆந்திரம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா 4 உறுப்பினர்கள், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 3 உறுப்பினர்கள், தெலங்கானா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா 2 உறுப்பினர்கள், உத்தரகண்டில் ஓர் உறுப்பினரின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.

இவர்களில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பியூஷ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் முக்கியத் தலைவர்கள் ஆவர்.

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்போது பாஜகவுக்கு 95 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 29 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஆந்திரத்தில் 3 உறுப்பினர்களுடன் இருக்கும் பாஜக, இந்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை.

மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், ஆளும் சிவசேனை கூட்டணி 3 இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும். மற்ற 3 இடங்களில் 2 இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்த மாநிலங்களைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜூலை மாதம் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset