நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஏர்வாடி இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழாவை ஒட்டி மே 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம்: 

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மே 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மே 11 விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 23 பணிநாள் என்று ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு விழா 10.05.2026 பிற்பகல் தொடங்கி 11.05.2026 பிற்பகல் வரை நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 11.05.2026 திங்கள்கிழமை அன்று ஒருநாள் மட்டும் "உள்ளூர் விடுமுறை” அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 23.05.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

​​​​​- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset