செய்திகள் தமிழ் தொடர்புகள்
மேற்கு வங்க தேர்தலில் வாக்களிக்க தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளாளர்கள் சாரிசாரியாக ரயிலில் புறப்படுகின்றனர்
சென்னை:
சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் தங்கிப் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் ரயில்களில் நேற்று மாலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
இதனால், ஹௌரா ரயிலின் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறக் காத்திருந்த தொழிலாளர்களை ரயில்வே காவல்துறையினர் ஒழுங்கப்படுத்தி, வரிசையில் நின்று ரயிலில் ஏறுமாறு அறிவுறுத்தினர்.
தொழிலாளர்கள் பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு மிக மகிழ்ச்சியோடு கிளம்புவதைப் பார்க்க முடிந்தது. பலரும் ஒரு வாரத்துக்கும் மேல் விடுமுறையில் சொந்த ஊர் செல்வதாகவும் கூறுகிறார்கள்.
அங்கே பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரும், காலையில் கோரமண்டல் விரைவு ரயிலும், மாலையில் ஹௌரா ரயிலும் வழக்கத்தைவிட கூட்டமாகப் புறப்படுவதாகக் கூறுகிறார்கள் அவ்வழியே பயணித்தவர்கள்.
திங்கள்கிழமை முதலே ஏராளமான தொழிலாளர்கள் சென்னையிலிருந்து புறப்படத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:42 pm
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
