செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இதுவரை இரு சக்கர வாடகை பைக்குகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் இதுவரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை டாக்சிகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஓலா, உபெர் போன்ற நிறுவனங்களின் வாடகை வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னையில் பைக் டாக்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராபிடோ, ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பைக் டாக்சிகளுக்கான கட்டணம் குறைவு என்பதால் சென்னையில் பலர் இந்த வகையான இரு சக்கர வாடகை வாகனமோட்டிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை வாடகை கார்களுக்கு ரூ.150 முதல் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆட்டோக்களுக்கு ரூ.80 முதல் ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், பைக் டாக்சியில் ரூ.40 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் பைக் டாக்சிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை வேகமாக கடந்து சென்றுவிடலாம் என்ற காரணத்தால் இதுபோன்ற இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த வகையான டாக்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் "இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த இதுவரை தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. பைக் டாக்சிக்கு தொடர்பான அனுமதியும் இதுவரை தமிழக போக்குவரத்து துறையால் வழங்கப்படவில்லை. செயலி மூலமாக டெலிவரி மற்றும் டாக்சி சேவைகளுக்கு பைக்குகளை பயன்படுத்த தமிழக போக்குவரத்து துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் கேட்டபோது, "மோட்டார் வாகன சட்டங்களின் படி இருசக்கர வாகனங்கள் வாடகை வாகனங்களாக கருதப்படாது. இதனால் அதற்கு வாடகை வாகனங்களுக்கான மஞ்சள் நம்பர் போர்டுகள் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
