செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் இதுவரை இரு சக்கர வாடகை பைக்குகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் இதுவரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை டாக்சிகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஓலா, உபெர் போன்ற நிறுவனங்களின் வாடகை வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னையில் பைக் டாக்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராபிடோ, ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பைக் டாக்சிகளுக்கான கட்டணம் குறைவு என்பதால் சென்னையில் பலர் இந்த வகையான இரு சக்கர வாடகை வாகனமோட்டிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை வாடகை கார்களுக்கு ரூ.150 முதல் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆட்டோக்களுக்கு ரூ.80 முதல் ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், பைக் டாக்சியில் ரூ.40 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் பைக் டாக்சிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை வேகமாக கடந்து சென்றுவிடலாம் என்ற காரணத்தால் இதுபோன்ற இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த வகையான டாக்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் "இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த இதுவரை தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. பைக் டாக்சிக்கு தொடர்பான அனுமதியும் இதுவரை தமிழக போக்குவரத்து துறையால் வழங்கப்படவில்லை. செயலி மூலமாக டெலிவரி மற்றும் டாக்சி சேவைகளுக்கு பைக்குகளை பயன்படுத்த தமிழக போக்குவரத்து துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் கேட்டபோது, "மோட்டார் வாகன சட்டங்களின் படி இருசக்கர வாகனங்கள் வாடகை வாகனங்களாக கருதப்படாது. இதனால் அதற்கு வாடகை வாகனங்களுக்கான மஞ்சள் நம்பர் போர்டுகள் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 2:46 pm
தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு
October 23, 2025, 7:49 pm
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு
October 20, 2025, 11:11 am
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்
October 19, 2025, 4:18 pm
ஏழை-எளியவர்களின் மகிழ்ச்சி கலந்ததே பண்டிகை: தீபாவளி நிகழ்ச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
October 19, 2025, 9:48 am
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் பயணம்
October 18, 2025, 10:52 pm
தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
October 18, 2025, 8:49 am
