நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்

பாரிஸ்:

போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி உடனடியாக ராஜினாமா செய்தார்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரோமா அணிக்கு எதிராக 1-1 என்ற கோல் கணக்கில் ஃபெனர்பாச்சே அணி சமநிலையில் முடிந்ததும்

அப்போது ​​பார்வையாளர் அரங்கிலிருந்து வீசப்பட்ட பாட்டிலால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அணியின் நிர்வாகி  இஸ்மாயில் கார்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

ஆனால், அவரது ராஜினாமாவை அணியின் தலைவர் நிராகரித்துவிட்டார்.

நான் விலகுகிறேன், இனி திரும்பி வரமாட்டேன்," என்று, ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட 65 வயதான அவர், போட்டிக்குப் பிறகு  கூறினார்.

இருப்பினும், கார்டல் அணியை விட்டு வெளியேற மாட்டார் என்று ஃபெனர்பாச்சே தலைவர் அஜீஸ் யில்டிரிம் வலியுறுத்தினார்.

இஸ்மாயில் கார்டல் இப்போதுதான் தனது பணியைத் தொடங்கியுள்ளார். நாங்கள் அவருக்கு ஆதரவளிக்கிறோம் என்று யில்டிரிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset