நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரசிகர்கள் ஸ்டேடியத்தியத்தில் அமர்ந்து பார்க்க சிலாங்கூர் எஃப் சியின் மனு நிராகரிப்பு: சபாவுக்கு எதிரான ஆட்டம் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் 

ஷா ஆலாம்: 

பார்வையாளர்கள் இல்லாமல் சிலாங்கூர்  எஃப் சி அணியின் ஆட்டங்கள் நடக்க வேண்டும் என்று FAM இதற்கு முன் தண்டனை வழங்கியிருந்தது 

இந்த தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம்  நிராகரித்துள்ளது.

இதன் விளைவாக, சொந்த அரங்கில் ஆதரவாளர்கள் இன்றி (மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்) விளையாட வேண்டும் என்ற FAM இன் உத்தரவு அமலில் இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசியப் கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சிலாங்கூர் எஃப்.சி தாக்கல் செய்த அவசர இடைக்கால விண்ணப்பத்தை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் அவசர தனி நடுவர் நிராகரித்தார் எனத் தெரிவித்துள்ளது.

“இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 9-ஆம் தேதி சொந்த மைதானத்தில் சபா எஃப்.சிக்கு எதிராக நடைபெறவுள்ள 2026/2027 எஃப்.ஏ. கிண்ணப் போட்டியில் சிலாங்கூர் எஃப்.சி அணி பார்வையாளர்கள் இன்றி விளையாட வேண்டும் என்ற தண்டனை தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று எஃப் ஏ.எம்  குறிப்பிட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset