நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யோங் சோ என்ற புலி அடுத்த மாதம் அதன் பூர்வீக வாழ்விடத்தில் விடப்படும்: ஆர்தர்

சுங்கை:

முதன்முறையாக, ஒரு பெண் புலி அடுத்த மாதத் தொடக்கத்தில் தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திலிருந்து அதன் பூர்வீக வாழ்விடத்தில் விடப்படவுள்ளது.

இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் இதனை கூறினார்.

கடந்த மாதம் உலு கிந்தாவில் உள்ள சுங்கை சோவில் பிடிக்கப்பட்ட 'யோங் சோ' என்ற அந்தப் புலி, சுதந்திரமாக வாழ்வதற்குப் போதுமான ஆரோக்கியத்தையும் ஆக்ரோஷத்தையும் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த புலியை வரும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அதன் பூர்வீக வாழ்விடத்தில் விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

 தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்கு களப்பயணத்தை மேற்கொண்ட அவர் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

முன்னதாக கடந்த ஜூலை 22 அன்று, ஈப்போ ஆசிரியர் கல்வி நிறுவன  வளாகத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய ஒரு பெண் புலி, வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்காக்கள் துறை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset