நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கினாபாலுவில் உள்ள வீடொன்றில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உடல் கருகி பலி 

கோத்தா கினாபாலு: 

கோத்தா கினாபாலு,  மெங்கத்தால், கம்போங் தாராவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர், அவரது மகன் மற்றும் பேத்தி ஆகிய மூவர் உயிருடன் எறிந்து உயிரிழந்தனர்.

பலியானவர்கள் 67 வயதான லூபின் அடோவ், அவரது மகன் அஸ்மான் மடுயின், 50 மற்றும் பேத்தி நூருல் அஷிக்கின் அலினோர், 29 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நூருல் அஷிக்கின் அலினோரின் 34 வயது கணவர் தீக்காயங்களுடன் தப்பினார். அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1.43 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இரண்டு அடுக்கு வீடு தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதிகாலை 2.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset