செய்திகள் மலேசியா
காஜாங், சுங்கை சுவாவில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 41 வயது சந்தேக நபர் கைது
காஜாங்:
காஜாங், சுங்கை சுவாவில் 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 41 வயது நபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 16ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 29ஆம் தேதி சுங்கை சுவாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்குத் தெரிந்த நபரான அந்த சந்தேக நபர், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் செயலைச் செய்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, கிளந்தானில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் வைத்து வேலையற்ற அந்தச் சந்தேக நபரைக் கைது செய்தது.
சந்தேக நபரை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் 376-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
சந்தேக நபருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் 'மெத்தாம்பேட்டமைன்' போதைப்பொருளைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனால் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் கீழ் அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
