நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணியில் உள்ள 100 சதவீத  விமானப் பணிக்குழுவினருக்கு போதைப்பொருள் பரிசோதனை: மலேசிய விமான நிறுவனங்களுக்கு CAAM உத்தரவு

கோலாலம்பூர்:

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் உள்ள விமானப் பணியாளர்களிடையே, பணிக்குத் தகுதியானவரா என்பதற்கான தரநிலைகளை வலுப்படுத்தவும், மது, போதைப்பொருள் தவறான பயன்பாட்டைக் குறைக்கவும், மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு வழிகாட்டுதல் நடவடிக்கைகள், விமான மற்றும் விமானப் பணிக்குழுவினருக்கு விரிவான போதைப்பொருள் பரிசோதனை, முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் சோதனைகளை அதிகரித்தல், ஆட்சேர்ப்பு செயல்முறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை அவசியமாக்குகின்றன.

சர்வதேச நுழைவுப் புள்ளிகளில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரந்த அரசாங்க முயற்சிகளுடன் இணைந்து, இடர் அடிப்படையிலான கண்காணிப்பு, முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஆய்வுகள் மூலம் CAAM தனது மேற்பார்வையை மேம்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset