நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு நில ஊழல்: குறைந்த விலைக்கு நிலம் விற்ற வழக்கில் அரசு நிறுவனத் தலைவர் உட்பட நான்கு பேர் கைது

பினாங்கு:

பினாங்கில் குறைந்த விலைக்கு நிலம் விற்பனை செய்து, அதன் மூலம் சுமார் RM1.96 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு அரசு நிறுவனத் தலைவர் உட்பட ஐந்து பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

தலைவர் தனது பதவியைப் பயன்படுத்தி, தனது கூட்டாளியுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திற்கு நிலம் விற்க அங்கீகாரம் அளித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அதிகார துஷ்பிரயோகத்திற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 23-இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நீதிமன்றக் காவல் மனு தொடர்பாக சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset