நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை: மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டார்

லண்டன்:

மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று அதன் நிர்வாகி மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற பருவத்திற்கு முந்தைய கடைசி ஆட்டத்தில் ஏசிமிலானிடம் 4-2 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டது.

இது தனது அணியின் செயல்பாடு போதுமானதாக இல்லை என ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மென்செஸ்டர் யுனைடெட் மேம்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

போலந்தின் வ்ரோக்லாவில் நடந்த இந்த ஆட்டத்தில், ஹாரி மேகுவேர், பேட்ரிக் டோர்கு ஆகியோரின் கோல்கள் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் இரண்டு முறை முன்னிலை பெற்றது.

ஆனால் ஏசிமிலான் அணி மீண்டு வந்து வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் நன்றாக விளையாடவில்லை. அதற்குக் சில காரணங்கள் உள்ளன.

ஆனால் நாங்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset