செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கை திரும்பப் பெற்றார் மனைவி சங்கீதா விஜய்
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கு மனுவை அவரின் மனைவி திருமதி சங்கீதா விஜய் திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஒருமுறைகூட விஜய்யும் சங்கீதாவும் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஜூன் மாதம் 15ல் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் பிரபலங்கள் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கணவர் விஜய் மீது தொடர்ந்த விவாகரத்து வழக்கை, வாபஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார். அதை தொடர்ந்து, வழக்கை முடித்து வைப்பதாக, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால், புதிதாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய, சங்கீதாவுக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2026, 4:09 pm
மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 4:05 pm
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
August 5, 2026, 3:59 pm
அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ. 131 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 6:51 am
“இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன்”: உதயநிதி விளக்கம்
August 4, 2026, 5:46 pm
