செய்திகள் மலேசியா
இந்தோனேசிய போதைப் பொருள் கடத்தல் வழக்கைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; விமானிகளுக்கு கூடுதல் சோதனை: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
இந்தோனேசிய போதைப் பொருள் கடத்தல் வழக்கைத் தொடர்ந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானிகளுக்கு கூடுதல் சோதனைக நடத்தப்படும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விமான நிலையப் பாதுகாப்பைக் கடுமையாக்குவது, மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகள், துணை விமானிகளுக்கான பின்னணி, சுகாதாரப் பரிசோதனைகளை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் மற்ற விஷயங்கள் குறித்து மேலும் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு, முழுமையான அறிக்கையை ஆய்வு செய்ய மலேசிய அதிகாரிகளுக்கு அவகாசம் தேவை.
இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்ம்
மேலும் அனைத்து குறைபாடுகளும் உடனடியாக சரிசெய்யப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார்.
முன்னதாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானி இந்தோனேசிய விமான நிலையம் ஒன்றில் போதைப்பொருட்களுடன் பிடிபட்டார்.
அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அந்த போதைப்பொருட்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
