நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டுப் பணம் கடனால் காணாமல் போன கணவன், மனைவி சரணடைந்தனர்: போலிஸ்

ஜித்ரா:

ஜூலை 20 முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தம்பதியினர், கூட்டுப் பணக் கடன் காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டு, இன்று அதிகாலை போலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குபாங் பாசு மாவட்டக் போலிஸ் தலைவர் முஹம்மது ராட்ஸி அப்துல் ரஹீம், 

39, 36 வயதுடைய அவ்விருவரும் இன்று காலை 1.50 மணிக்கு குபாங் பாசு மாவட்டக் போலிஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாகத் தெரிவித்தார்.

புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள தாமான் டேசா பயன்மாஸில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து ஜூலை 20 முதல் வெளியேறிய மூன்று குழந்தைகளையும் காணவில்லை.

அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் 62 வயதான தந்தை, தனது மகள், மருமகன், பேத்தியைக் கண்டுபிடிக்க முடியாததால், நேற்று புக்கிட் காயு ஹீத்தாம் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட ஒரு தம்பதியினர் தொடர்பான கூட்டு கடனால் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் ஒருவரிடமிருந்து தனது தரப்புக்கு ஒரு புகார் வந்ததாக முகமது ராட்ஸி நேற்று கூறினார்.

25,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, 23 வயதான அந்த நபர் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset