நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன் 

சென்னை:

மூத்த குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை, விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்து, முதியோருக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கான அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் இல்லங்கள், தகுதிவாய்ந்த பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொழுதுபோக்கு வசதிகளுடன் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும்.

முதலாம் ஆண்டில், 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் இடம்பெறுவர். இத்திட்டத்திற்காக 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset