நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ. 131 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் மரிய வில்சன்

சென்னை:

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 131 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

புகழ்பெற்ற சர்வதேச உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் 'அண்ணல் அம்பேத்கர் அயல் நாட்டுக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்' மூலம், ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 362 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ. 131 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset