செய்திகள் மலேசியா
டெங்கில் ஆலயத் தலைவர் அத்துமீறல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்
ஷாஆலம்:
நிலத்தகராறில் ஈடுபட்டிருந்த டெங்கிலில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவரை, குற்றவியல் அத்துமீறல் குற்றச்சாட்டிலிருந்து ஷாஆலம் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.
கடந்த பிப்ரவரி 9 அன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து வாதிட்ட 49 வயதான எம். பரமகுரு மீதான குற்றச்சாட்டை நீதிபதி ஹஸ்லினா ஹுசைன் தள்ளுபடி செய்தார்.
பரமகுருவின் வழக்கறிஞரின் கூற்றுப்படி, குற்றம் புரியும் தெளிவான நோக்கம் அவருக்கு இருந்தது என்பதை குற்றப்பத்திரிக்கை நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி கண்டறிந்தார்.
மேலும், குற்றச்சாட்டுகளில் சரிசெய்ய முடியாத நிரந்தரக் குறைபாடுகள் இருந்ததால், முழுமையான விசாரணையைத் தொடர்வது நேர விரயம் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
பரமகுரு சார்பில் வழக்கறிஞர்கள் லத்தீஃபா கோயா, ராஜேஷ் நாகராஜன் ஆஜரானார்கள்.
அதே சமயம் துணை அரசு வழக்கறிஞர் ஹேக்கல் இஸ்மாயில் அரசுத் தரப்புக்காக வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
