செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி RCI விசாரணை: முன்னாள் CEO, CFO அதிகாரிகளை எம்.ஏ.சி.சி கைது செய்தது
பெட்டாலிங் ஜெயா:
தபோங் ஹாஜி RCI விசாரணை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தபோங் ஹாஜியின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரியையும் முன்னாள் தலைமை நிதியக அதிகாரியையும் கைது செய்தது
68 மற்றும் 60 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும், இரண்டு தோட்ட நிறுவனங்களின் பங்குகளை 370 மில்லியன் ரிங்கிட் மதிப்பிற்கு வாங்கியதில் தங்களது பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் புத்ராஜயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் உறுதிப்படுத்தினார்.
2009ஆம் ஆண்டு எம்.ஏ.சிசி சட்டத்தின் செக்ஷன் 23இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
