நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாசிர் கூடாங் மருத்துவமனையில் நவீன வசதிகள் இருந்தபோதிலும், 1,192 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது: ஓன் ஹபிஸ்

பாசிர் கூடாங்:

நவீன வசதிகளையும் பல்வேறு நிபுணத்துவத் துறைகளையும் கொண்ட பாசிர் கூடாங் மருத்துவமனை  பணியாளர் பற்றாக்குறை காரணமாக இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை.

இம்மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த 2,271 பணியிடங்களில், 1,079 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

மேலும் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்தார்.

மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், பிற சுகாதாரப் பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளதாக அவர் விளக்கினார்.

ஜொகூர் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த மருத்துவமனையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு  உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

இம்மருத்துவமனை நவீன வசதிகள், பெரிய கொள்ளளவு மற்றும் பல்வேறு நிபுணத்துவத் துறைகளைக் கொண்டுள்ளது. 

இருப்பினும், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, அந்த மருத்துவமனையால் இன்னும் முழுத் திறனில் இயங்க முடியவில்லை.

ஆக இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வுக் காணப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset