
செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் ஊரடங்கு தொடங்கியது: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் தொடங்கியது. இது திங்கள் கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாத் தொற்று கடந்த சில வாரங்களாக வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனாத் தொற்றின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பொது மக்களிடையே பதற்றம் தோன்றியுள்ளது.
புது டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக24,383 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும்கொரோனாத் தொற்று ஏற்பட்டு இப்போதுதான் குணமானது.
இந்நிலையில் டெல்லியில் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும், தனியார் அலுவலகங்கள் வார இறுதி நாட்களில் 50 சதவீத திறனில் அலுவலகத்தில் பணியாற்றினால் போதுமென்று அறிவிக்கப்பட்டது.
வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசியமற்ற எந்த செயல்பாடும் அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பால், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm