நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கழிவறையில் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுப்பு: விசாரணைக்கு உதவ சந்தேக நபருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் விதிப்பு 

குளுவாங்: 

குளுவாங்கில் உள்ள தாமான் செத்தியா முத்தியாராவில் உள்ள ஓர் இல்லத்தின் கழிவறை தொட்டிலில் பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது 

இந்நிலையில் விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபருக்கு ஏழு நாட்கள் தடுப்புக் காவல் விதித்து இங்குள்ள மாஜிஸ்திரெட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

19 வயதுடைய இளைஞருக்கு எதிரான மாஜிஸ்டிரெட் நுராசிடா ரஹ்மான் இந்த தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்தார். 

இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ள இது ஏதுவாக அமையும் 

இந்த வழக்கு விசாரணை குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது 

பெண் சந்தேக நபர் இன்னும் என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் துணை ஆணையர் பஹ்ரின் முஹம்மத் நோ கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset