நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவது பெர்சத்து கட்சிக்கு சாதகமாக இருக்கும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நீலாய் சட்டமன்றத் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவது பெர்சத்து கட்சிக்கு சாதகமாக இருக்கும்.

நீலாய் சட்டமன்றத் தொகுதி பெர்சத்து வேட்பாளர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் நீலாய் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து சார்பில் நான் போட்டியிடுகிறேன். எண் 4 எனது வேட்பாளர் எண்ணாகும்.

இத்தேர்தலை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளேன்.

குறிப்பாக நீலாய் தொகுதியில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களுக்கான புதிய பிரதிநிதி வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது மக்களை சந்தித்து பேசும் போது நான் தெரிந்துக் கொண்டேன்.

ஆக மக்களின் இந்த எதிர்பார்ப்பு பெர்சத்து கட்சிக்கு சாதகமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இருந்தாலும் வாக்குகளை சேகரிக்க நாளை வரை முயற்சிகளை மேற்கொள்வேன்.

மேலும் இத்தொகுதியில் வெற்றி பெற கடைசி வரை போராடுவேன் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset