நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் வேட்பாளர் தேர்வை தேசிய முன்னணியிடம் தேசியக் கூட்டணி விட்டு விடுகிறது: ஹம்சா

சிரம்பான் :

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் வேட்பாளர் தேர்வை தேசிய முன்னணியிடம் தேசியக் கூட்டணி விட்டுவிடுகிறது.

வவாசான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

இந்த முடிவை தேசியக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும் மந்திரி புசார் பற்றி விவாதிக்க விரும்பினால், தேசியக் கூட்டணியில் உள்ள நாங்கள் அதை தேசிய முன்னணியிடம் ஒப்படைத்துள்ளோம்.

நாங்கள் இதை தேசிய முன்னணிக்குத் தெரிவித்து சமர்ப்பித்துள்ளோம். மேலும் அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் ஒப்புதலைப் பெற்றுள்ளோம்.

சிரம்பானில் இரு கூட்டணி தலைவர்களுடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset