நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனான், சிரியா, காசாவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை: இஸ்ரேலின் கடும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய நெதன்யாகு

பைத்துல்மக்டீஸ்: 

மத்திய கிழக்கில் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். காசா, லெபனான், சிரியாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் இருப்பு தொடரும் என்றும், அதற்கு எந்த காலவரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வெளியான இந்த அறிக்கை, பிராந்தியத்தில் அமைதிக்கான முயற்சிகளுக்குச் சவாலாகக் கருதப்படுகிறது.

“பாதுகாப்பு மண்டலம்” என்ற காரணத்தை முன்வைத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளை நெதன்யாகு நியாயப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பதற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதை மேலும் நீட்டிக்கும் நிலைப்பாட்டையே இஸ்ரேல் கடைப்பிடிக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அந்தப் பகுதிகளில் நீண்டகாலம் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் என உறுதிப்படுத்தினார். மேலும், தேவையெனில் ஈரானுக்கு எதிராக “முழு வலிமையுடன்” நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த அறிவிப்புகள், குறிப்பாக ஹெஸ்புல்லா தொடர்பான லெபனான் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.

அமைதி, பிராந்திய நிலைத்தன்மைக்காக உலக நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில், இஸ்ரேலின் இந்த உறுதியான நிலைப்பாடு மத்திய கிழக்கின் எதிர்கால அரசியல், பாதுகாப்பு நிலவரம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset