நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

G7 உச்சநிலைக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம்: Tesla காரை எரித்தனர் பேராட்டவாதிகள்

ஜெனிவா:

சுவிட்சர்லந்தின் ஜெனீவா நகரில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

இவியன் (Evian) நகரில் G7 உச்சநிலைக் கூட்டம் நடக்கவிருக்கும் வேளையில் அந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனக் கட்டடம் அருகே தொடங்கிய வன்முறை மாலை வரை நீடித்தது.

காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

நகரின் நடுவே ஊர்வலம் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு டெஸ்லா காருக்குத் தீ வைத்தனர்.

வங்கிச் சன்னல்களை உடைத்தனர். காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர்.

பேரணியில் சுமார் 20,000 பேர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

G7 கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் அமைப்பு பேரணியை வழிநடத்தியது.

அரசியல், பொருளாதார அதிகாரம் பெரும் பணக்கார நாடுகான G7 நாடுகளின் வசம் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset