செய்திகள் மலேசியா
பெர்சாமா கட்சியால் 50 வயதுக்குட்பட்ட 70% வேட்பாளர்களை களமிறக்க முடியும்: ரபிசி
சிரம்பான்:
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் 70% வேட்பாளர்களில் 50 வயதுக்குட்பட்டவர்களாக நிறுத்த பெர்சாமா மலேசியா கட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் வயதானவர்கள் கோபப்பட வேண்டாம் என்று ரபிசி ரம்லி கூறினார்.
ஏனென்றால் இன்னும் 30% பேர் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மிகவும் பெரியது.
மேலும் 50% என்ற இலக்குடன், பல பெண் வேட்பாளர்களை நிறுத்த தனது கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.
நெகிரி செம்பிலானின் சிரம்பானில் நேற்று நடந்த ஒரு உரையாடலில் பெர்சாமா தலைவர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
மலாய், சீன, இந்திய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான பெண் வேட்பாளர்கள் முன்வந்து எங்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட வேண்டும்.
மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெர்சமா கட்சியில் சுமார் 25,000 பேர் இணைந்தனர்.
ஒரு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 50,000 ஆக உயர்த்த முடியும் என நம்புவதாக ரபிசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 11:52 am
மலேசிய ஊடக கவுன்சிலின் தலைவராக டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் நியமனம்
June 15, 2026, 11:41 am
புதிய அரசியல் கட்சி; மலாய் மக்களைப் பிளவுபடுத்தாது: ஜாஹித்
June 15, 2026, 11:09 am
அமெரிக்காவில் ஆடம்பர சொத்து வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா மறுத்தார்
June 15, 2026, 10:29 am
நில உரிமையாளரே தட்டுப்பாட்டை வாடகைக்கு வழங்க முன்வந்ததாக ரோஹிங்கியர்களின் கூற்று
June 15, 2026, 10:26 am
டிரெய்லர் லோரி கார் மீதி கவிழ்ந்த சம்பவத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்
June 15, 2026, 9:30 am
ஒற்றுமை என்பது வெறும் அரசியல் ஒத்துழைப்பு மட்டுமல்ல: கணபதிராவ்
June 14, 2026, 11:41 pm
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவராக விகேகே ராஜசேகரன் வெற்றி
June 14, 2026, 3:24 pm
